ஆம்பூரில் ‘என் உயிரினும் மேலான’ கவிதை நூல் வெளியீடு கழக துணைப்பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை

viduthalai
1 Min Read

ஆம்பூர், அக். 16- முத்தமிழ் அறிஞர் கலைஞர் குறித்த “என் உயிரினும் மேலான”.. என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா ஆம்பூர் ரோட்டரி ஹாலில் 13.10.2024 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாதனூர் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.டி.சீனி வாசன் தலைமை தாங் கினார். திருப்பதூர் மாவட்ட தி.மு.க பிரதிநிதி பொன்.இராஜன்பாபு வரவேற்புரை நிகழ்த்தினர்.

திருப்பதூர் மாவட்ட தி.மு.க செயலாளர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் புத்தகத்தை வெளியிட ஆம்பூர் சட்ட மன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன் பெற்று கொண்டார். குடியாத்தம் சட்டமன்ற உறிப்பினர் வி.அமலு விஜயன். நூலை பெற்றுக்கொண்டு அதை குறித்து சிறப்புரை ஆற்றினர். எஸ்.சாந்தி சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார்.

நூலின் ஆய்வுரையை கவிஞர் யாழ்ஆதி, கவிஞர் ரகசியன், முனைவர் பு.சாரோன், மருத்துவர் சோ.தில்லைவாணன் ஆகியோர் வழங்கினார்கள்.

நிகழ்வில் திராவிடர் கழக துணைப்பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி நூலின் சிறப்பு களை எடுத்துக் கூறி உரை ஆற்றினார். நூலின் பதிப்புரை வழங்கிய எழுத் தாளர் அழகிய பெரியவன் சிறப்புரை ஆற்றினார்.

இறுதியாக நூலாசிரியர் கவிஞர் தியாக.இனியவன் ஏற்புரை வழங்கினார், இசுலாமிய மகளிர் கல்லூரி பேராசிரியர் தி.அனுராதா நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் திராவிடர் கழக தோழர்கள், திராவிட முன்னேற்ற கழக தோழர் கள், இனியவனின் உற வினர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பெருமளவு கலந்துகொண்டு சிறப்பித் தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *