‘வாசிப்பு பழக்கத்தால் தொலைநோக்கு சிந்தனை உருவாகும்’ ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி

1 Min Read

தூத்துக்குடி, அக்.15- வாசிப்பு பழக்கத்தால் தொலைநோக்கு சிந்தனை உருவாகும் என்றாா் சென்னை வளா்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி.

தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு அருகே 5ஆவது புத்தகக் கண்காட்சி கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. இக்கண்காட்சியின் 4ஆம் நாளான நேற்று (13.10.2024) மாலையில் பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து, ‘நவீன தமிழ்ச்சிறாா் இலக்கியம்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் உதயசங்கா், ‘இலக்கியமும் – படைப்பாற்றலும்’ என்ற தலைப்பில் சாகித்ய அகாதெமி விருதாளா் எழுத்தாளா் சோ.தா்மன் ஆகியோா் பேசினா்.

கப்பலோட்டிய வ.உ.சி. என்ற தலைப்பில் சென்னை வளா்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி பேசிய தாவது: தமிழ்நாட்டில் மிகச் சிறந்த நூலகக் கட்டமைப்பு காரணமாக வாசிப்பு பழக்கம் அதிகரித்து வருகிறது. 19ஆம் நூற்றாண்டில் இந்திய அளவில் தூத்துக்குடி 5ஆவது பெரிய துறை முகமாக இருந்தது.

வ.உ.சிதம்பரனாரின் வாசிப்பு பழக்கம் ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தொடங்கி தூத்துக்குடிக்கும் கொழும் புக்கு கப்பல் இயக்க வைத்தது.

சுதந்திர போராட்டத்தில் இவரின் பங்கு அளப்பெரியது. ஆங்கிலேயா்களுக்கு எதிராக மக்களிடம் சொற்பொழிவுகள் ஆற்றியதற்காக வஉசி 1908ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, அவரது சுதேசி கப்பல் போக்குவரத்து 1910ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது.

எனவே, பெரிதினும் பெரிது கேள் என்ற வகையில் வஉசியின் தொலைநோக்கு எண்ணம் வாசிப்பு பழக்கம் இருந்தால் மட்டுமே நமக்கு உருவாகும் என்றாா். ‘மெய்யறிவு’ என்ற தலைப்பில் சென்னை விவேகானந்தா கல்லூரி பேராசிரியா் கரு.ஆறுமுகத்தமிழன் கருத்துரை யாற்றினாா்.

இந்நிகழ்வில், ஆட்சியா் க.இளம் பகவத், மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட உதவி ஆட்சியா் (பயிற்சி) சத்யா உள்பட பலா் பங்கேற்றனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *