குரூப் -4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிப்பது தொடர்பாக எழுந்த கோரிக்கைகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்

viduthalai
1 Min Read

சென்னை, அக்.15- குரூப்-4 2024ஆம் ஆண்டு போதுமான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தேர்வர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளதாவது “2022இல் நடைபெற்ற தொகுதி-4 தேர்வின் மூலம் 2020-2021, 2021-2022, 2022-2023 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கான 10139 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது சராசரியாக, ஒரு நிதியாண்டிற்கு 3380 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

2024 இல் நடைபெற்ற தொகுதி-4 தேர்வின் மூலம் 2023-2024, 2024-2025 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கான 8,932 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதாவது ஒரு நிதியாண் டிற்கு 4,466 காலிப் பணியிடங்கள் நிரப்பப் படவுள்ளன.

எனவே 2024ஆம் ஆண்டு தொகுதி-4 தேர்வின் மூலம் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு கூடுதலாக 1,086 (4,466-3,380) காலிப் பணியிடங்கள், ஆக மொத்தம் 2,172 (1086×2) காலிப் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படவுள்ளன.

எனவே சமூக வலைதளங்களில் காலிப் பணியிடங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது”.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *