துணைத் தேர்வர்களுக்கு ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்க வேண்டுகோள்

1 Min Read

சென்னை, ஆக. 1-  பொதுத் தேர் வில் தோல்வி பெறும் மாணவர் களுக்கு தேர்வுத்துறையால் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெற்று உயர் கல்வியை மாணவர்களால் தொடர முடியும்.  இந்நிலையில் துணைத் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர் களுக்கு ஒருங் கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டில் 2016ஆ-ம் ஆண்டுக்குப் பின், 10, 12ஆ-ம் வகுப்பு துணைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஒன்றுக்கும் மேற் பட்ட சான்றிதழ்களை வைத்துள்ளவர்களுக்கு ஒருங் கிணைத்து ஒரே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அதேநேரம் அதற்கு முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர் களுக்கு இதுபோல் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வுத்துறை வழங்கு வதில்லை. 

இதனால் வேலை வாய்ப்பு, உயர்கல்வி உட்பட பல்வேறு நேரங்களில் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழ் நாடு அரசு நேரடியாக தலையிட்டு அனைவருக்கும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தேர்வுத் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தமிழ்நாட்டில் 2016ஆ-ம் ஆண்டில் இருந்துதான் மாண வர்களுக்கு அடையாள எண் வழங் கும் நடைமுறை அமலில் உள்ளது. அந்த மாணவர்களின் விவரங்கள் முழுமையாக இணைய தளத்தில் சேக ரித்து வைக்கப்பட் டிருக்கும். இதனால் அவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் களை நம்மால் ஒருங்கிணைந்து வழங்க முடியும்.

அதற்கு முந்தைய ஆண்டு களில் படித்தவர்களுக்கு அந்த வசதிகள் இல்லாததால் ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்க முடியாது’’ என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *