30.07.2023 அன்று திருச்சி தமிழ்ச் சங்க மன்றத்தில் நடைபெற்ற உலகப் பாவலர் தமிழன்னைத் தமிழ்ப்பேரவை பன்னாட்டு அமைப்பு நடத்திய விருது வழங்கும் விழாவில் தஞ்சை மாநகர திராவிடர் கழகத் தலைவர் பா.நரேந்திரனுக்கு தந்தைபெரியார் விருது வழங்கி சிறப்பித்துள்ளனர். விருது பெற்ற பா.நரேந்திரனுக்கு திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், பகுத்தறிவாளர்களாக ஊடகப் பிரிவு மாநில தலைவர் மா. அழகிரிசாமி, தஞ்சை மாநகர அண்ணா நகர் பகுதி கழக செயலாளர் வே. இரவிக்குமார் ஆகியோர் பயனாடை அறிவித்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். விருது பெற்றதன் மகிழ்வாக பா. நரேந்திரன் விடுதலை ஆண்டு சந்தா ரூ.2000 வழங்கி மகிழ்ந்தார் (31.7.2023)
தஞ்சை மாநகர திராவிடர் கழகத் தலைவர் பா.நரேந்திரனுக்கு தந்தைபெரியார் விருது
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books