பாத வெடிப்புக்கு பக்குவமான மருத்துவம்!

1 Min Read

பாத வெடிப்பை எளிதில் சரி செய்வதற்கான இயற்கை மருத்துவ முறைகளை பார்ப்போம்.

தோலின் உள் அடுக்கில் உள்ள எண்ணெய் பதம் குறைவது, உடலின் நீர்ச்சத்து குறைவது, உடல் சூடு இவைகளால் தோல் வறட்சி அடைந்து பாத வெடிப்பு அல்லது பித்த வெடிப்பு ஏற்படுகிறது. பனிக்காலத்தில் இந்நோய் அதிகப்படும். பாத வெடிப்பு உள்ளவர்கள் நாள்தோறும் காலை, இரவு இருவேளை வெதுவெதுப்பான வெந்நீரில் கால் பாதங்களை நன்றாக மூழ்கவைத்து கழுவ வேண்டும்.
பாத வெடிப்பை சரிசெய்ய ஆலோசனைகள்:

1. சோற்றுக்கற்றாழையின் ஜெல்லியை நன்றாக அரைத்து, ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் நன்றாக கலந்து பாத வெடிப்பு உள்ள இடங்களில் பூசி வர வேண்டும்.

2. மருதோன்றி இலை, மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து பூசலாம்.

3. பறங்கி பட்டை சூரணம் -1 கிராம், குங்கிலிய பற்பம் -200 மிகி, பவள பற்பம் -200 மிகி ஆகியவற்றை மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

4. பாத வெடிப்பு உள்ள இடங்களில் கிளிஞ்சல் மெழுகு அல்லது அமிர்த வெண்ணெய் போட வேண்டும்.

5. உணவில் மோர், தயிர், நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும், வாரம் ஒருமுறை திரிபலா எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *