வீட்டில் இருக்கும் பொருட்களே போதும்! விரட்டிடும் தொண்டைப் பிரச்சினையை!

1 Min Read

குளிர்காலங்கள் மற்றும் காலநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டே சரி செய்யலாம். அவ்வகையில், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, தொண்டை குரல் பாதிப்பு போன்றவற்றுக்கான எளிய தீர்வுகளை பார்ப்போம்.

1) ஆடாதோடை இலை-2, மிளகு -5: இதை பனை வெல்லம், நாட்டு சர்க்கரை அல்லது தேனுடன் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும்.

2) சின்ன வெங்காயம் -5 எடுத்து நாட்டு வெல்லத்துடன் மென்று சாப்பிட வேண்டும்.

3) பாலுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும்.

4) முட்டையை ஆஃப் பாயில் செய்து அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும்.

5) சிற்றரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, கொத்தமல்லி, அதிமதுரம் இவைகளை சேர்த்து பொடித்த, பொடி சிறிதளவு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

6) பூண்டு சாறுடன் தேன் கலந்து அதை தொண்டையினுள் தடவி வர வேண்டும்.

7) வெந்நீரில் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி வாய் கொப்பளிக்க வேண்டும்.

8) சித்த மருத்துவத்தில் தாளிசாதி வடகம் -1- 2 மாத்திரை கடித்து சாப்பிட வேண்டும்.

9) தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *