ஆத்தூர் – தம்மம்பட்டியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

Viduthalai
1 Min Read

ஆத்தூர், அக். 12- ஆத்தூர் திராவிடர் கழகத்தின் சார்பாக தம்மம்பட்டியில் கழகத்தின் சார்பாக அறிவுலக பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 20.9.2024 அன்று.மாலை 6 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்வுக்கு பொதுக்குழு உறுப்பினர் சி.செயராமன். தலைமையேற்றார். வருகை தந்த அனைவரையும் இரா.வீராசாமி. வரவேற்று பேசினார். த.வானவில் மாவட்ட தலைவர், இரா.விடுதலை சந்திரன் மாவட்ட காப்பாளர், நீ.சேகர் மாவட்ட செயலாளர், ரெ.மூ.நடராஜன் செந்தாரப்பட்டி ‌பகுத்தறிவாளர் கழகம், ப.வேல்முருகன் மாநில இளைஞரணி துணை செயலாளர், வ.முருகானந்தம்‌ மாவட்ட பக தலைவர், ‌சி. பூபதி சேலம் மாவட்ட செயலாளர் முன்னிலை வகித்தனர்.

ஆத்தூர் அ.சுரேஷ் தலைமைக் கழக அமைப்பாளர் ‌கருத்துரையாற்றினார். கழகக் பேச்சாளர் தேவ.நர்மதா சிறப்புரை உரையாற்றினார். தம் மம்பட்டி பொதுமக்கள் அனைவரும் செவிமடுத்து கேட்டு மகிந்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.கார்முகிலன். ஒன்றிய செயலாளர் ஆ.செல்வம், சேலம் மாவட்ட செயலாளர் அவர்களின் துணை வியார் தோழர் கோமதி, ‌ஆத்தூர் வேணுகோபால், குமரன் காட்டுக்கோட்டை தங்கராசு உடையாப்பட்டி சக்திவேல் மற்றும் தம்மம்பட்டி நகர தலைவர் வீராசாமி அவர்களின் குடும்பத்தார் வீ.முரளி, மகள் கண்ணகி, மருமகள் செல்வக்குமார், பெரியார் பிஞ்சு என நிகழ்ச்சி நடந்த ‌இடத்தில் ஆங்காங்கே நின்று நூற்றுக்கும் மேற்பட்ட ஏராளமான பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்து ஆதரவு தெரிவித்தார்கள். நிறைவாக நன்றியுரை ப.வேல்முருகன் ‌பேசி நிறைவு செய்தார்
கடைசியில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்துங்கள் என கோரிக்கையை முன் வைத்தார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *