பா.ஜ.க.வுக்கு அடுத்த தேசிய தலைவர் யார்? : கட்சிக்குள் முரண்பாடு

2 Min Read

சென்னை, அக்.12- ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை, பா.ஜ., தேசிய தலைவராக்க பிரதமர் மோடியும், அமித் ஷாவும் விரும்புவதாகவும், ஆனால், ஒன்றிய அமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகானை தலைவராக்க, ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ., தேசிய தலைவராக உள்ள நட்டாவின் பதவிக்காலம் முடிந்ததால், அவர் ஒன்றிய அமைச்சராகியுள்ளார். பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முடிந்து, உட்கட்சி தேர்தல் நடக்க இருப்பதால், புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. கிளை கமிட்டி தலைவர் துவங்கி, மாநிலத் தலைவர்கள் தேர்தல் முடிந்து, வரும் டிசம்பர் இறுதியில் தேசிய தலைவர் தேர்தல் நடக்கவுள்ளது.

கட்சிக்கு தொடர் வெற்றி கிடைத்து வந்ததால், மோடி – – அமித்ஷா முடிவில் மற்றவர்கள் யாரும் தலையிட முடியாத நிலை இருந்தது. மக்களவைத் தேர்தலில் பா.ஜ.,வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், முக்கிய முடிவுகளை எடுப்பதில் ஆர்.எஸ்.எஸ்.,சையும் ஆலோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், பா.ஜ., தேசிய தலைவர் தேர்வு தாமதமாகி வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பூபேந்தர் யாதவ், மகாராட்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆகிய மூவரில் ஒருவரை தலைவராக்க, பிரதமர் மோடியும், அமித் ஷாவும் விரும்புவதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி, அமித்ஷா உள் ளிட்டோர், அரியானா வெற்றிக்கு தர்மேந்திர பிரதானை பாராட்டி வருவதால், அவருக்கு தேசிய தலைவர் பதவி கிடைப்பது கிட்டத்தட்ட உறுதி யாகி விட்டதாக பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானில் பா.ஜ.,வுக்கு பெரும் சரிவு ஏற்பட்டது. 2014, 2019 போல ஹிந்தி பேசும் மாநிலங் களில், பா.ஜ., வெற்றியை தொடர வேண்டுமானாலும், மத்தியப் பிரதேச மேனாள் முதலமைச்சரும், ஒன்றிய அமைச்சருமான சிவ்ராஜ்சிங் சவுகானை தேசிய தலைவராக்க வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
சிவ்ராஜ்சிங் சவுகான் தலைவரானால், அவர் சுதந்திரமாகச் செயல்படுவார் என்பதால், ஆட்சிக்கும், கட்சிக்கும் இடையே இடைவெளி அதிகமாகி விடும் என கருதும் பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் பலரும், தர்மேந்திர பிரதான் அல்லது பூபேந்தர் யாதவை தலைவராக்க வலியுறுத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *