கற்கை நன்றே கற்கை நன்றே! பிச்சைப்புகினும் கற்கை நன்றே!

1 Min Read

எந்த ஊரில் யாசகம் எடுத்தாரோ அதே ஊரில் இன்று மருத்துவர். திபெத் அகதியாக பிங்கி ஹர்யானி. பெற்றோரை இழந்து தனது முதியவயது பாட்டியுடன் வசித்துவந்தார். தனது 4 வயதில் இருந்து இமாச்சல் பிரதேசத்தின் மெக்லயோத்கன்ஸ் என்ற பிரபலமான சுற்றுலா தலத்தில் பிச்சை எடுத்து பாட்டிக்கும் அவரும் வாழ்க்கையைக் கழித்தனர்.
அவரது நிலையை கண்ட புத்த மதத்துறவி ஜம்யாங் – பிங்கியை படிக்க வைக்க முடிவு செய்து, அவரது பாட்டியை காப்பகம் ஒன்றில் தங்கவைத்து பிங்கியை பள்ளிக்கூடத்திலும் சேர்த்துள்ளார்

பிச்சை எடுத்த சிறுமி என்பதால் ஆரம்ப காலகட்டங்களில் பள்ளியில் கடுமையான கேலி கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார். ஆசிரியர் கூட அவரை கிண்டலடித்தாராம். ஆனால் பிங்கியோ பின்னர் படிப்பின் தீவிரத்தை புரிந்து கொண்டு தொடர்ந்து படித்தார்.
அதன் பிறகு உயர்கல்வி கற்று சீனாவில் மருத்துவம் கற்க அனுப்பப்பட்டார். தற்போது சீனாவில் மருத்துவம் முடித்து இந்தியாவில் மருத்துவம் செய்வதற்கான தகுதித் தேர்விலும் வெற்றிபெற்று இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் இமாச்சல் மருத்துவ கழகத்திலும் பதிவு செய்து மருத்துவர் ஆனார். பொது மருத்துவத்தில் சிறந்து விளங்கும் இவர் எந்த இடத்தில் கையேந்தி பிச்சை பெற்றாரோ அதே நகரத்து வாசிகளின் கைகளைப் பிடித்து இன்று மருத்துவம் பார்க்கிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *