ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

கேள்வி 1: உடல் உழைப்புப் பணிக்காக குவியும் வடநாட்டுக்காரர்களையும், தமிழர் வணிகத்தை கைப்பற்றும் வடவர்களையும் ஒரே நிலையில் வைக்க முடியுமா?

– கோ.பாண்டியன், ஆண்டிமடம்

பதில் 1: நல்ல கேள்வி இது. உடல் உழைப்புப் பணியாளர்களாக வரும் தொழிலாளர்களால் தமிழ்நாடு வளருகிறது. நம்மைச் ‘சுரண்ட’ அவர்கள் வரவில்லை; தானும் வாழ்ந்து, நம்மையும் வாழவைக்கவே தொழிலாளர்களாக அவர்கள் வந்து உதவுகிறார்கள்.
சில கொள்ளை – திருட்டு, தகாத நடவடிக் கைக்காரர்களும் அந்தப் போர்வையில் வருவதைக் கண்காணிக்க வேண்டியது இன்றியமையாதது.
தமிழ்நாடு வணிகத்தையே கைப்பற்ற, தமிழ்நாட்டு வணிகர்களின் வாழ்வாதாரத்தை உறிஞ்சிடும் நிலை – ஏற்கத்தக்கதல்ல. இரண்டும் வெவ்வேறான அணுகுமுறைகளால் அளக்கப்பட வேண்டிய ஒன்றாகும்!

– – – – –

கேள்வி 2: ஆயுதங்கள் எதையுமே கண்டுபிடிக்காதவர்கள் “ஆயுத பூஜை” கொண்டாடுகிறார்களே?

– கார்த்திகேயன், பருத்திப்பட்டு

பதில் 2: ‘பிறர் செய்த ஆயுதங்க’களுக்கு பூஜை என்ற பெயரில் இப்படிப்பட்ட விழாக்களைக் கண்டுபிடிப்பதுதான் இவர்கள் வேலை.
ஆனால், வெற்றுப் பீத்தலில் ‘முன்பே எங்களிடம் ஏவுகணை இருந்தது’ என்பது போன்ற மூடநம்பிக்கைளைக் பரப்புதல் போன்ற ஜம்பம் மட்டுமே நம்மிடம் குறைவில்லாமல் இருக்கிறதே!

– – – – –

கேள்வி 3: சமூக வலைதளங்களில் இன உணர்வைக் காட்டும் இளைஞர்கள் நேரடியாக இயக்கங்களில் களப்பணியாற்றத் தயங்குவதேன்?

– இளமாறன், பெரம்பலூர்

பதில் 3: எல்லோரிடமும் இதை எதிர்பார்க்க முடியாது; இந்த அளவுக்காவது முன்வருகிறார்களே – அதுவே நமக்கு இலாபம்தானே! சுயநலத்தின் அளவில் பல ‘டிகிரி’ – சதவிகித அளவீடு மாறி மாறித் தெரியும்.

– – – – –

கேள்வி 4: அரியானா தேர்தல் பாணியில் இனி பாஜகவிற்கு எல்லா மாநிலத்திலும் வெற்றி வாகை தேடி வரும் என்கிறார்களே பாஜகவினர்?

– வெற்றிமணி, நுங்கம்பாக்கம்

பதில் 4: அதுதான் கடந்த பல ஆணடுகளாக நாடறிந்த ரகசியமாயிற்றே!

– – – – –

கேள்வி 5: மேலைநாடுகளில் தேர்தல் கருத்துக் கணிப்பிற்கும் இந்தியாவில் தேர்தல் கருத்துக் கணிப்பிற்கும் என்ன வேறுபாடு?

– க.செம்மொழி, மதுரை

பதில் 5: மேலை நாடுகளில் குறைந்த அளவுக்கு விருப்பு – வெறுப்புக்கான சதவிகித அளவும் மாறும். அதில் உண்மை நிலவரம் அதிகம்; இங்கே அது குறைவு. பெரும்பாலும் கருத்துக் கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பே இடம் பெறும் என்பதே கசப்பான உண்மை!

– – – – –

கேள்வி 6: துணை முதலமைச்சர் பொறுப்புக்கு உதயநிதி ஸ்டாலின் பொருத்தமானவரா?

– சாக்கியன், வேலூர்

பதில் 6: எல்லா வகையிலும் 100க்கு 100 சதவிகிதம் பொருத்தமானவர் மட்டுமல்ல; மக்கள் மகிழத்தக்க வகையில் செயல்பட உறுதி பூண்டுள்ளார்.
காமாலைக் கண்ணன்களுக்கு இது புரிந்தும், ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். விட்டுத் தள்ளுங்கள்!

– – – – –

கேள்வி 7: ஜம்மு – காஷ்மீர் அரசை நிம்மதியாக ஆள விடுவார்களா?

– ரவிமதியன், தஞ்சை

பதில் 7: தமிழ்நாட்டைப் படுத்தும் பாடு அங்கும் நடக்கக் கூடும்! அரசியல் நிதி கொடுக்க, குத்தல் குடைச்சல் மூலம் நித்தம் நித்தம் தொல்லைகள் தொடரக் கூடும்! பொறுத்திருந்து பார்ப்போம்.

– – – – –

கேள்வி 8: சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்களின் வேலை நிறுத்தம் – தமிழ்நாடு அரசின் தலையீடு எவ்விதமிருக்கும்?

– த.மன்னன், நெல்லை

பதில் 8: நமது முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு இதை சுமூகமாக முடித்து பாஸ் – பாஸ் முடிவை ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்துவார் என்று நம்புகிறோம்.

– – – – –

கேள்வி 9: கூட்டணிக் கட்சிகளை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டு காங்கிரசுக்கு அறிவுரை கூறுகிறாரே மோடி?

– கே.விக்னேஸ்வரன், திருச்சி

பதில் 9: மோடி வித்தைகள் மிகச் சிறப்பானவை ஆயிற்றே! அது போன்றதே இது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *