புகழ் அழியாத புத்தரும் – நகல் அழியாத இராமாயணமும்!

Viduthalai
2 Min Read

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 29.09.2024 அன்று நடந்த ‘இந்தியப் பண்பாடு மற்றும் கலாச்சாரம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்தியப் பண்பாடு கலாச்சாரம் என்வுடன் அங்கு புத்தர் சிலைகளும், அவர் தொடர்பான ஓவியங்கள் மட்டுமே இருந்தது.
இது மட்டுமல்ல, மூன்றாம் முறையாக தேர்தலில் வெற்றி பெற்றும் முதல் பயணமாக இத்தாலி சென்ற பிரதமரை இந்தியத் தூதரகம் வரவேற்கும் விதமாக வைக்கப்பட்ட பதாகைகள் அனைத்திலும் புத்தரும், அவர் தொடர்பான நினைவுச் சின்னங்களுமே இருந்தன.
ஹிந்துத்துவ அமைப்புகள் ஹிந்துராஷ்டிரா, இந்தியா ஹிந்து நாடு என்று 10 ஆண்டுகளாக தொடர்ந்து கூவிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால், இவர்களால் ராமனின் படம் மற்றும் சிலையையோ அல்லது கிருஷ்ணன் உள்ளிட்ட சிலைகளையோ கடல் கடந்து இந்திய கலாச்சாரம் என்று கொண்டு போக முடியாது காரணம் ராமாயணமும், மகாபாரதமும் கிரேக்க கதைகளை காப்பி அடித்து எழுதப்பட்ட புனைக்கதைகள் ஆகும்.

சுமார் 2,900 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க நாட்டு நாவலாசிரியர் ஹோமர் என்பவரால் எழுதப்பட்ட ‘ஒடிசி’ மற்றும் ‘இலியட்’ எனும் உலகப் புகழ் பெற்ற பண்டையகால இருபெரும் கற்பனை புனைவு நாவல் இதை வாய்மொழியாக ஏற்கெனவே இங்கே மக்களிடையே பொழுதுபோக்காக சொல்லப்பட்டுவரும் நாடோடிக் கதைகளோடு இணைத்து ராமாயணம் எழுதப்பட்டது. அதை தமிழில் மொழி மாற்றியவர் கவிஞர் கம்பர் என்கிறார்.

‘ஒடிசீ – இலியாட்’ நாவல்
ஸ்பார்ட்டாவின் அரசனான மெநிலாஸின் (ராமன்) மனைவியான ஹெலன் (சீதை) மீது காதல் வயப்பட்ட திராய் நாட்டு இளவரசனான பாரிஸ் (ராவணன்) அவளை கவர்ந்து கொண்டு தனது நாட்டிற்கு தூக்கி வந்து விடுகிறான். இதனால் மெனிலாஸ்(ராமன்) தன் சகோதரன் அகமேனானின் (இலட்சுமணன்) உதவியை நாடுகிறான்.
இவர்களின் தலைமையில் பெரும்படை ட்ராய் (இலங்கை) நகரத்தை முற்றுகையிடுகிறது. அந்நகரம் பெரிய மதில்களால் (கடலால்) சூழப்பட்ட நகரம். எனவே, மதிலை தாண்டி உள்ளே செல்லும் முயற்சியில் பல சிரமங்களுக்கு இடையே ஆண்டுக்கணக்கில் போர் நீடிக்கிறது. இறுதியாக படைகள் மதிலைத் தாண்டி முன்னேறுகின்றன.

போரின் சேதங்களை குறைக்க பாரிஸ் (ராவணன்) மெலநிசுடன் (ராமன்) தனிப்பட்ட ஒரு சண்டை போடுவதன் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்தனர்.
அந்த போரில் பாரிஸ் (ராவணன்) தோற்கடிக்கப்பட்டு மெலனிஸ் (ராமன்) அவனைக் கொன்று விடுகிறான். தன் மனைவி ஹெலனை (சீதை)யும் மீட்டு விடுகிறான்.
ஹாலிவுட் படங்களை அப்படியே காப்பி அடித்து இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றி ஹிந்தி தமிழ் படங்களாக ஓட விடுவர், இவர்களுக்கு சுமார் 2,300 ஆண்டுக்கு முன் வாழ்ந்த வால்மீகியும்…. 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கம்பரும். முன்னோடிகளாக இருந்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *