ரயில்வே வேலை நிறுத்தம் – ரகசிய வாக்கெடுப்பு : என். கண்ணையா அறிவிப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாடு

சென்னை, நவ .17  அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடத்துவது தொடர்பாக நவ.21, 22 ஆகிய தேதிகளில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யூ) பொதுச்செயலாளர் என்.கண்ணையா தெரிவித்தார். தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில், பொது மகாசபைக் கூட்டம் சென்னையில்   15.11.2023  அன்று நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் எஸ்ஆர் எம்யூ பொதுச்செயலாளராக என்.கண் ணையா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவ ராக சி.ஏ.ராஜா சிறீதர்ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதுதவிர, கோட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்துக்கு பிறகு, எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளர் என்.கண்ணையா கூறியதாவது:

ரயில்களில் பாமர மக்கள் பயணிக்கும் பொதுப் பெட்டிகளை ஏசி பெட்டிகளாக மாற்றதிட்டமிட்டுள்ளனர். இதனால் பாமர, ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை எதிர்க்கிறோம். ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ரயில்வே ஊழியர் களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2004ஆ-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட் டது. இந்த திட்டம் தேசிய ஓய்வூதிய திட்டம் என்றுபெயர் மாற்றம் செய்யப் பட்டாலும் பயனற்றதாக உள்ளது. புதிய பென்சன் திட்டத்தை மாற்றி, முன்பு இருந்ததுபோல, ஓய்வு பெறும்போது கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் என்று மாற்ற வேண்டும். தற் போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசு, தாங்கள் பதவிக்கு வந்தால், ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை தருவோம் என்று உறுதி கூறினர்.

ஆனால், இன்றோ ஆள்குறைப்பு, தனி யார்மயமாக்கம் ஆகியவற்றின் மூலமாக தற்போது இருக்கும் பணியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. தற்போது, ரயில்வேயில் காலியாக உள்ள 90,000 இடங்களுக்கு 2.80 கோடி பேர் விண்ணப்பிக்கின்றனர். வேலை இல்லாத நிலை எந்த அளவுக்கு உள்ளதை இதன் மூலம் புரிந்துகொள்ள வேண்டும். அய்.சி.எஃப்-ல்ஒரு வந்தே பாரத் ரயில் தயாரிக்க ரூ.98 கோடி செலவிடப்பட்டது. தற்போது, ரஷ்யா கம்பெனிக்கும், மற்ற கம்பெனிகளுக்கு ரூ.139 கோடியில் ஒரு வந்தே பாரத் ரயில்தயாரிக்க கொடுக்க உள்ளார்கள்.

இதனால், வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது. மக்களுக்கு இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும். பொதுப் பெட்டிகளை ஏசி பெட்டியாக மாற்றக்கூடாது. நல்ல நிலையில் இயங்கும் கம்பெனிகளை வெளிநபர்களுக்கு கொடுக்கக் கூடாது. இவற்றை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்வது தொடர்பாக அகில இந்திய அளவில் நவ.20, 21இ-ல் ஒன்றிய அரசு ஊழியர்கள், ரயில்வே ஊழியர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உள்ளோம். இதன்பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *