ஆண்டிமடம் அல்லி அம்மையார் மறைவு – உடற்கொடை பொதுச்செயலாளர் இறுதி மரியாதை

Viduthalai
1 Min Read

ஆண்டிமடம், அக்.11- அரியலூர் மாவட்டம்ஆண்டிமடம் டி.எஸ்.கே.நகை மாளிகை உரிமையாளர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வியைரும் நகர கழக செயலாளர் அண்ணாமலை, வெங்கடேசன் ஆகியோரின் தாயாருமான அல்லி அம்மையார் (வயது 69) உடல்நலக்குறைவு காரணமாக 10.10.2024 அதிகாலை இயற்கை எய்தினார்.

கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், மாவட்ட இணை செயலாளர் ரத்தின ராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன், ஒன்றிய செயலாளர் தியாக. முருகன், ஒன்றியத்தலைவர் இரா.தமிழரசன், ஒன்றிய அமைப்பாளர் கோ.பாண்டியன், மாவட்ட இளைஞரணி தலைவர் க.கார்த்திக் மாவட்ட இ.அ.அமைப்பாளர் க.செந்தில், செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்செல்வன்,ஆண்டிமடம் நகர அமைப்பாளர் பட்டுசாமி, நகரத் தலைவர், ந.சுந்தரம், பாவேந்தர் விரும்பி, ஆண்டிமடம் சுந்தரவடிவேலு, சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்கேற்று மாலை வைத்து இறுதி மரியாதை செய்தனர்.

பின்னர் பகல் 2.30மணியளவில் அம்மையாரின் உடல் எவ்வித மூடச் சடங்குகளுமின்றி வீரவணக்க முழக்கங்களோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. உடற்கொடை வழங்கிய நிகழ்வு அந்தப் பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *