நாகை, அக்.11 நாகை மீனவர்கள் 18 பேர் மீது தாக் குதல் நடத்தி, அவர்களது வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை இலங்கை சிங்கள கொள்ளையர்கள் பறித்துச் சென்ற நிகழ்வு தமிழ்நாடு மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
நாகை மாவட்டம் செருதூர் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர், சக மீன வர்கள் 4 பேருடன் கடந்த 8-ஆம் தேதி காலை ஃபைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு 2 ஃபைபர் படகுகளில் வந்த இலங்கையை சேர்ந்த 9 சிங்கள கடற் கொள் ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி தமிழ்நாடு மீனவர்களை தாக்கியதுடன், அவர்களது வலை மற்றும் உபகரணங்களைப் பறித்துச் சென்றனர். காயமடைந்த 5 மீனவர்களும் நேற்று (10.10.2024) காலை செருதூர் மீன் இறங்கு தளத்துக்கு வந்து சேர்ந்தனர்.
இதேபோல, கோபால் என்பவருக்குச் சொந்தமான படகில் மீன் பிடிக்கச் சென்ற செல்லையன் உள்ளிட்ட 5 மீனவர்கள் மீதும், மகேஸ்வரி என்பவருக்குச் சொந்தமான படகில் மீன் பிடிக்கச் சென்ற செல்வம் உள்ளிட்ட 4 மீனவர்கள் மீதும், சத்தியசீலன் என்பவருக்குச் சொந்தமான படகில் மீன்பிடிக்கச் சென்ற விஜயன் உள்ளிட்ட 4 மீனவர்கள் மீதும் இலங்கை சிங்களகொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மேலும், அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான 800 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் உள்ளிட்ட உபகரணங்களை சிங்கள கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். காய மடைந்த மீனவர்கள்ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்,தாக்குதல் நிகழ்வு குறித்து கீழையூர் கடலோரக் காவல் குழும காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
200 கிலோ வலைகள்… இதேபோல, நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ப வருக்கு சொந்தமான படகில் சென்ற 5 மீனவர்களைத் தாக்கிய இலங்கை சிங்கள கொள்ளையர், படகில் இருந்த 200 கிலோ வலைகள் மற்றும் 50 கிலோ மீன்களைப் பறித்துச் சென்றனர். பின்னர், கரை திரும்பிய மீனவர்கள் அளித்த புகாரின்பேரில் கடலோர காவல் குழும காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
ஏற்கெனவே, வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மீன வர்களின் மீன்பிடி உபகரணங் களை இலங்கை சிங்கள கொள்ளையர்கள் பறித்துச் சென்ற நிலையில்,தற்போது மீண்டும் தாக்குதல் நிகழ்வு நடைபெற்றுள்ளது சக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் அனுரகுமார திசநாயக புதிய அதிபராக பதவி ஏற்ற பிறகு இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்று சந்தித்தார். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சரகம் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் இலங்கையின் புதிய அதிபரைச் சந்தித்த ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் இரண்டு நாட்டு உறவு மற்றும் வர்த்தகம் தொடர்பானவைகள் மற்றும் ஏற்ெகனவே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் தங்கு தடையின்றி நீடிக்கவும், மேலும் இந்திய இலங்கை கடற்பகுதியின் பாது காப்பை அதிகரிக்கவும் இரண்டு நாட்டு கடற்பாதுகாப்பு படைகள் இணைந்து செயலாற்றவும் இந்திய தரப்பில் அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார் என்று குறிப்பிட்டி ருந்தது, ஆனால் புதிய அதிபர் பதவி ஏற்ற 22.09.2024 அன்றே தூத்துக்குடி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். அதன் பிறகு ஜகதாப்பட்டினம் நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது