சென்னையை அழகுபடுத்த சாலை தடுப்புகளில் 10 ஆயிரம் மலர் செடிகளை நட மாநகராட்சி நடவடிக்கை

1 Min Read

சென்னை, அக்.11 சென்னையை அழகு படுத்த சாலை தடுப் புகளில் 10 ஆயிரம் மலர் செடிகளை நட மாநக ராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு கல்வி, மருத் துவம், தொழில் உள்ளிட்ட துறைகளில் முன்னேறி இருந்தாலும், மாநில தலைநகரமான சென்னை குப்பை நகரமாகவே காட்சியளிக்கிறது. அத னால் தலைநகரின் முகத்தை பொலிவுறச் செய்யும் வகையில் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், தீவிர தூய்மைப் பணி, இரவு நேர தூய்மைப் பணி, பூங்காக்களில் தீவிர தூய்மைப் பணி, பேருந்து நிழற்குடைகளில் தூய்மைப்பணி, சுவரொட் டிகளை அகற்றுதல், சாலையோரம் நீண்ட காலமாக நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றுதல் போன்ற பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக மாநகர சாலைகளை மலர்ச்செடிகளால் அலங்கரிக்க திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “சென்னை மாநகராட்சி சார்பில் சாலை நடுவே 113 தீவு திட்டுக்கள் மற்றும் 104 சாலை தடுப்புகளில் பசுமை போர்வையுடன் பராமரிக்கப்படுகின்றன. இப்பகுதிகளில் வனத்துறை உதவியுடன் 10 ஆயிரம் மலர்ச்செடிகளை நட்டு சென்னையை அழகுபடுத்த திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சியின் கோரிக் கையை ஏற்று சாலை தடுப்புகளில் மலர்ச் செடிகள் நடப்பட உள்ளன. வனத்துறை சார்பில் சென்னையில் நன்மங்கலம், அண்ணா நகர், கரசங்கால் போன்ற பகுதிகளிலும் பல்வேறு மாவட்டங்களிலும் மரக்கன்றுகள் மற்றும் புதர் செடி வகையை சேர்ந்த மலர்ச்செடிகள் வளர்க்கப்பட்டு வரு கின்றன. குறிப்பாக, சென்னைக்குள் பாரி ஜாதம், பவளமல்லி, மகிழம், மந்தாரை உள் ளிட்ட 12 வகையான மலர்ச்செடிகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கி, அந்த நீரில் வளரும் விதமாக, நவ.15-ஆம் தேதிக்குள் செடிகளை நடும் பணிகளை முடிக்க முடிவு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *