மகிழ்வும்… வாழ்த்துகளும்… நன்றியும்…

1 Min Read

உலகின் ஒரே நாத்திக நாளேடான ‘ விடுதலை’ நாளேட்டின் தொடர்ந்து 60 ஆண்டுகள் ஆசிரியராய்…..

அப்பழுக்கு இல்லாத தன் 90 ஆண்டு கால வாழ்வில் 80 ஆண்டுகள் பொதுவாழ்வில்……..

தலைவர் தந்தை பெரியாரின் கொள்கையில் 100 சதவீதம் திளைத்து…… வாழ்ந்து, ‘எனக்கு சொந்த புத்தி தேவை இல்லை ,பெரியார் தந்த புத்தி போதும்’ என்பதில் எள் முனையளவு கூட மாறாது, ஓயாது உழத்து, தமிழ் சமுதாயம்  மட்டுமல்ல,  ஒட்டுமொத்த மானிட சமுதாயம் சமூக நீதி பெற்றிடவும், ‘மானமும், அறிவும் பெற்றிடவும்  உழைத்திடும், பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் அவர்களை, தமிழ்நாடு அரசின்  ‘தகைசால் தமிழர் விருது – 2023’க்கு தேர்வு செய்தமைக்கு தமிழ்நாடு அரசுக்கு மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

‘உலகம் ஒன்றாதல் வேண்டும்’ என்ற தந்தை பெரியாரின் பெரும்பணி நோக்கி துடிப்புடன் செயலாற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் ஆசிரியர் அவர்களை பெருமகிழ்வோடு வாழ்த்துகிறோம்.

அய்யா பணிமுடிக்க ஆசிரியர் வழி நடப்போம்… வாரீர்! வாரீர்!!

நன்றியுடன்…..

இரா.தமிழ்ச்செல்வன், தலைவர்

வி.மோகன்,பொதுச்செயலாளர்

பகுத்தறிவாளர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *