மகிழ்வும்… வாழ்த்துகளும்… நன்றியும்…

Viduthalai
1 Min Read

உலகின் ஒரே நாத்திக நாளேடான ‘ விடுதலை’ நாளேட்டின் தொடர்ந்து 60 ஆண்டுகள் ஆசிரியராய்…..

அப்பழுக்கு இல்லாத தன் 90 ஆண்டு கால வாழ்வில் 80 ஆண்டுகள் பொதுவாழ்வில்……..

தலைவர் தந்தை பெரியாரின் கொள்கையில் 100 சதவீதம் திளைத்து…… வாழ்ந்து, ‘எனக்கு சொந்த புத்தி தேவை இல்லை ,பெரியார் தந்த புத்தி போதும்’ என்பதில் எள் முனையளவு கூட மாறாது, ஓயாது உழத்து, தமிழ் சமுதாயம்  மட்டுமல்ல,  ஒட்டுமொத்த மானிட சமுதாயம் சமூக நீதி பெற்றிடவும், ‘மானமும், அறிவும் பெற்றிடவும்  உழைத்திடும், பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் அவர்களை, தமிழ்நாடு அரசின்  ‘தகைசால் தமிழர் விருது – 2023’க்கு தேர்வு செய்தமைக்கு தமிழ்நாடு அரசுக்கு மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

‘உலகம் ஒன்றாதல் வேண்டும்’ என்ற தந்தை பெரியாரின் பெரும்பணி நோக்கி துடிப்புடன் செயலாற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் ஆசிரியர் அவர்களை பெருமகிழ்வோடு வாழ்த்துகிறோம்.

அய்யா பணிமுடிக்க ஆசிரியர் வழி நடப்போம்… வாரீர்! வாரீர்!!

நன்றியுடன்…..

இரா.தமிழ்ச்செல்வன், தலைவர்

வி.மோகன்,பொதுச்செயலாளர்

பகுத்தறிவாளர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *