தஞ்சாவூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வல்லத்தில் உற்சாக வரவேற்பு

1 Min Read

அரசியல்

வல்லம்,ஆக.2- தமிழ்நாடு அரசின் சார்பில் 2023ஆம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தேர்வு செய்து நேற்று (1.8.2023) சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தலை வர்கள், பல்துறை அறிஞர் பெருமக்கள், தோழர்கள் பெருமகிழ்வுடன் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

விழாக் கோலம் பூண்டது வல்லம்

தஞ்சை வல்லத்திற்கு இன்று (2.8.2023) வருகைபுரிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கழகத்தோழர்கள், பல்வேறு கட்சியினர், அமைப்பினர் பொதுமக்கள் உற்சாகத்துடன் பெருந்திரளாகத் திரண்டு வரவேற்றனர். தஞ்சாவூர் மாநகர் மேயர் சண் ராமநாதன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி பரிசுப்பொருளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில் கழகப்பொறுப்பாளர்கள் ரோஜாப்பூ மாலை அணிவித்து தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், காப்பாளர் வெ.ஜெயராமன், மு.அய்யனார்  உள்ளிட்ட தோழர்கள், பல்வேறு கட்சி களின் பொறுப்பாளர்கள் கலந்துகொண் டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *