திருமாவேலன் அவர்களின் அன்னையார் மறைவு! முதலமைச்சர் அவர்களின் இரங்கல்

1 Min Read

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான திருமாவேலன் அவர்களின் தாயாரும் – பெரும்புலவர் திரு. படிக்கராமு அவர்களின் வாழ்விணையருமான திருமிகு முத்துலக்குமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

திருமிகு முத்துலக்குமி அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, பெற்றெடுத்து – ஆளாக்கி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் திருமாவேலன் அவர்களுக்கும், வாழ்க்கைத் துணையைப் பிரிந்து வாடும் திரு. படிக்கராமு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்க்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.

கழகத் தலைவர் இரங்கல்

கலைஞர் தொலைக்காட்சியின் ஆசிரியர் எழுத்தாளர் ப. திருமாவேலன் அவர்களின் அன்னையார் மறைவுற்ற செய்தி அறிந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், அலைப்பேசி மூலம் திருமாவேலனிடம் தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *