ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2.8.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

* இதுவரை எவரும் கேட்டறியா ஊர்  நூஹ் மாவட் டத்தில் ஏற்பட்ட வன்முறையை தடுக்க திரைப்படங்களில் வருவது போல், காவல்துறை இறுதியாக வந்தது. வெறுப்பை உமிழும் கொடூரர்களை தடுங்கள் என்கிறது தலையங்க செய்தி.

* பீகார் அரசு மேற்கொண்ட ஜாதிவாரியான கணக் கெடுப்பு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் விலக்கியது.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கு மற்றும் அரசமைப்பு எந்திரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம் மணிப்பூர் மாநில காவல்துறை தலைமை இயக்குநரை ஆக.7இல் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

* மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் வரும் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் விவாதம் நடத்தப்படும் என மக்களவைத் தலைவர் நேற்று (1.8.2023) அறிவித்தார். விவாதத்துக்கு வரும் 10ஆம் தேதி பிரதமர் மோடி பதில் அளித்து பேச உள்ளார். 

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 21ஆம் நூற்றாண்டு இந்தியாவில் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது, மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கடந்த அய்ந்து ஆண்டுகளில் குஜராத்தில் 81 காவல்துறை காவலில் 81 மரணங்கள் நிகழ்ந்துள்ளன, இது இந்தியாவிலேயே அதிகம் என ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய்  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தி இந்து:

* 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியத்தில் ஒன்றிய அரசு ரூ.6,366 கோடி பாக்கி வைத்துள்ளது.

* தகவல் பாதுகாப்பு மசோதா மீதான குழு அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *