வேளாண்மைத் துறையில் 125 பேருக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Viduthalai
1 Min Read

சென்னை, அக்.10- வேளாண்மை துறை சார்பில் 125 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
வேளாண் துறை சார்ந்த பணி களை விரைந்து மேற் கொள்ளவும், அரசின் வேளாண்திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்றடையும் வகையிலும், வேளாண்மை உழவர் நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை மேற் கொண்டு வருகிறது.

அதன்படி முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை வேளாண்மை உழவர் நலத்துறையில் தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் மூலமாக தொழில்நுட்ப மற்றும் அமைச்சுப் பணிகளுக்கு 1,714 பேர் நியமனம் செய்யப்பட் டுள்ளனர்.
இதுதவிர பணிக்காலத்தில் மரணம் அடைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப் படையில் 223 பேருக்கும் என மொத்தம் 1,937 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தற் போது தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் மூலம் உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு 83 பேருக்கும், கருணை அடிப்படையில் இள நிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு 42 பேரும் என மொத்தம் 125 பேர் தேர்வு செய்யப்பட்டுள் ளனர்.

இவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (9.10.2024) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முருகானந்தம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, வேளாண்மை இயக்குநர் முருகேஷ், வேளாண்மை விற்பனை மற் றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் பிரகாஷ், தோட் டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *