தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பெரியார் திடல் பணித் தோழர்கள் அனைவரும் திரண்டு வாழ்த்து தெரிவித்தனர். ‘தகைசால் தமிழர் ஆசிரியர் வாழ்க’ என்ற முழக்கத்துக்கிடையில் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நன்றி தெரிவித்துக் கொண்ட தமிழர் தலைவர், “இவ்விருது பற்றிய குறிப்பிலேயே 60 ஆண்டுகள் ‘விடுதலை’ ஆசிரியராக பணியாற்றியது பற்றியும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருக்கிறது. அது தனி மனிதனாக என்னுடைய சாதனையல்ல. எனவே இவ்விருது உங்கள் அனைவருக்கும் உரியது தான்” என்று தெரிவித்தார். அப்போது திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், மேலாளர் ப. சீதாராமன், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், அச்சகப் பிரிவு மேலாளர் க. சரவணன், திராவிடன் நிதி நிறுவன மேலாளர் து. அருள்செல்வன் உள்ளிட்ட தோழர்கள் உடனிருந்தனர். (பெரியார் திடல் – 1.8.2023)
தகைசால் தமிழருக்குப் பெரியார் திடல் பணித் தோழர்கள் வாழ்த்து
1 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
