தருமபுரி புத்தகத் திருவிழா வேளாண்துறை அமைச்சர் பங்கேற்பு

1 Min Read

தருமபுரியில் மாவட்ட நிர்வாகம் தகடூர் புத்தகப் பேரவை, பாரதியார் பதிப்பகம் இணைந்து நடத்தும் 6ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா அக்டோபர் 14ஆம் தேதி வரை தருமபுரி மதுரா பாய் சுந்தரராவ் கல்யாண மண்டபத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அரங்கம் 52 இல் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அங்காடியை பார்வையிட்டார். அவருக்கு புத்தக நிலைய பொறுப்பாளர் அ.தமிழ்ச்செல்வன் பெரியார் இல்லாவிட்டால் தமிழகம் என்னும் நூலை அளித்து சிறப்பு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியருக்கு சாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அ. மணி, மேனாள் அமைச்சர் பி.பழனியப்பன், மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் தடங்கம் பி சுப்பிரமணி, கழக நிர்வாகிகள், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை, மாணவர் அணி பொறுப்பாளர்கள் ப.பெரியார், அ.பிரதாப், சு.சூர்யா, மேனாள் மாவட்ட செயலாளர் பெ.கோவிந்தராஜ், நகர அமைப்பாளர் க. இராமச்சந்திரன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆசிரியர் பூங்குன்றன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *