பகுத்தறிவு ஆசிரியரணியின் மேனாள் மாநிலத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு மெ. அன்பரசு மறைவிற்கு வீர வணக்கம்

viduthalai
1 Min Read
 பகுத்தறிவு ஆசிரியர் அணியின் மேனாள் தலைவர் ஆசிரியர் மெ.அன்பரசு (வயது 96) அவர்கள் வயது மூப்பின் கார ணமாக நேற்று இரவு (8-10-2024)  9 மணி அளவில் மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்
இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பொறுப்பேற்று செயலாற்றியவர்.  லால்குடி பகுதியில் பகுத்தறிவாளர் கழகத் தலைவராகவும்,  பகுத்தறிவு ஆசிரியர் அணியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் மாநிலத் தலைவராகவும் அரும்  பணியாற்றியவர். பணி ஓய்வுக்குப்பின்  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள பழமார்நேரி கிராமத்தில் வசித்து வந்தார்.
இயக்கத்தில் ஏராளமான மாணவர்களையும் இளைஞர்களையும் உருவாக்கியவர்.
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட திராவிடர் கழகத் தலைவராகவும் பணியாற்றியவர்.
சிறிது காலத்திற்கு முன் அவரை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரித்து வந்தோம்!
அவர் பிரிவால் வாடும் அவரது வாழ்விணையர் நவமணி, உற்றார் உறவினர்கள், நண்பர்கள், கழகத் தோழர்கள் அனைவருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்தம் அளப்பரிய தொண்டுக்கு வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
      கி.வீரமணி
 தலைவர், 
  திராவிடர் கழகம் 
குறிப்பு: இன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்  தஞ்சை  இரா. ஜெயக்குமார்,  திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், தலைமைக் கழக அமைப்பாளர் ஆல்பர்ட் உள்ளிட்ட  தோழர்கள் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பர்.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *