தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு திருப்பத்தூர் நகர் மின் உற்பத்தி – மின் பகிர்மான அலுவலகத்தில் சட்டத்தை மீறி கோயில் கட்டுமானப் பணி

1 Min Read

திருப்பத்தூர் நகர் ஜலகாம்பாரை சாலையில் அமைந்துள்ள திருப்பத்தூர் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான அலுவலகத்தில், தமிழ்நாடு அரசின் ஆணையை மீறி அரசு அலுவலக வளாகத்தில் கோயில் கட்டிக் கொண்டு வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசாணை என்ன சொல்கிறது?

‘‘இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் ஆகிய எந்த மதத்தைச் சேர்ந்தவராயினும் கடவுள்கள் படங்கள் மற்றும் சிலைகள் ஆகியவற்றை பொது அலுவலகங்களிலிருந்து நீக்க வேண்டும்.

மேலும் நமது மாநிலம் மதச் சார்பற்ற ஆட்சி செய்யும் மாநிலம் ஆகையால், எந்த மதத்தைச் சார்ந்த சாமியார்கள், சாதுக்கள், பெண் கடவுள்கள் ஆகியவற்றின் படங்கள் மற்றும் சிலைகளை அரசு அலுவலகங்கள் அல்லது அரசுக்குச் சொந்த மான இடத்தில் வைத்திருப்பது சரியல்ல என்று அரசாங்கம் கருதுகிறது. ஆகையால் இந்தக் கட்டிடங் களில் இப்போது அவைகள் இருக்குமாயின் அவற்றை அகற்ற வேண்டும் என்று அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது’’ என்று அரசாணை கூறுகிறது.

ஆனால், இந்த சட்டங்கள் எல்லாம் இவர்கள் பார்வைகளுக்கு செல்லுகிறதா? தெரிந்தே அரசை மதிக்காமல் இது போன்ற நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுகிறார்களா ? இவர்களுக்கு இந்த துணிச்சலை கொடுப்பது யார்?

உடனடியாக அரசு இதை கவனத்தில் கொண்டு, இது போன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். இத்தகைய செயல்கள் இங்கு மட்டுமல்ல டாக்டர் கலைஞர் எந்த நோக்கத்திற்காக தந்தை பெரியார் சமத்துவபுரங்களை கொண்டு வந்தாரோ! அவைகளையெல்லாம் சிதைக்கும் வகையில் சமத்துவபுரங்களிலும் ஜாதிக்கொரு கோயில்களை கட்டிக் கொண்டு வருகிறார்கள்.

சட்டப்படி தவறான இவற்றை அரசு அனுமதிக்கலாமா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *