தஞ்சை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

viduthalai
1 Min Read

தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தில் 18.9.2024 அன்று சங்கத் தலைவர் பி. காமராஜ் அவர்கள் தலைமையில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூரண ஜெயந் ஆனந்த தந்தை பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்பொழுது வழக்குரைஞர்கள் ‘சமூகநீதி நாள்’ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நீதிபதிகள் இங்கு பணியாற்ற தந்தை பெரியாரின் சமூகநீதியே காரணம் என்று பதிவு செய்தனர். நிகழ்வில் தஞ்சை மாவட்ட கழகத் தலைவரும் மேனாள் சங்கத் தலைவருமான சி. அமர்சிங் தொடக்க உரையாற்றினார். வழக்குரைஞர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜன் மற்றும் மூத்த வழக்குரைஞர்கள் முன்னிலை வகித்தனர். இறுதியாக மூத்த வழக்குரைஞர் பி. சின்னசாமி நன்றி கூறினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *