தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தில் 18.9.2024 அன்று சங்கத் தலைவர் பி. காமராஜ் அவர்கள் தலைமையில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூரண ஜெயந் ஆனந்த தந்தை பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்பொழுது வழக்குரைஞர்கள் ‘சமூகநீதி நாள்’ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நீதிபதிகள் இங்கு பணியாற்ற தந்தை பெரியாரின் சமூகநீதியே காரணம் என்று பதிவு செய்தனர். நிகழ்வில் தஞ்சை மாவட்ட கழகத் தலைவரும் மேனாள் சங்கத் தலைவருமான சி. அமர்சிங் தொடக்க உரையாற்றினார். வழக்குரைஞர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜன் மற்றும் மூத்த வழக்குரைஞர்கள் முன்னிலை வகித்தனர். இறுதியாக மூத்த வழக்குரைஞர் பி. சின்னசாமி நன்றி கூறினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தில் பெரியார் பிறந்த நாள் விழா
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books