காஞ்சிபுரத்தில் மின்னணு சாதன கண்ணாடி ஆலை அமைக்க சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி

1 Min Read

சென்னை, அக்.9- காஞ்சி புரத்தில் மின்னணு சாதன கண்ணாடி தொழிற்சாலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் 840 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க பெறும் என தகவல் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த கார்னிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் இன்ப்ராகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் 840 நபர் களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உற் பத்தி தொழிற்சாலை அமைப் பதற்கான புரிந்துணர்வு ஒப் பந்தம் கடந்த ஜனவரி மாதம் கையெழுத்தாகின.

இந்த நிறுவனம் உலகத் தரம் வாய்ந்த மின்னணு சாதனங் களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி செய்ய காஞ்சிபுரம் மாவட்டம் பிள் ளைப்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில் ரூ.640 கோடி மதிப்பில் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.

இந்த தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி யுள்ளது. இத்தொழிற்சாலையில் மூலம் நவீன முறையில் முன்-கவர் கண்ணாடி (Front cover glass) தயாரித்து, இந்தியாவில் உள்ள பேனல் தயாரிப்பாளர்கள் மற்றும் அலைபேசி போன் உற்பத்தியாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *