கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

9.10.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங். கூட்டணி ஆட்சி அமைக்கிறது: அரியானாவில் 3ஆவது முறையாக பாஜக வெற்றி.
* அரியானாவில் காங்கிரஸ் உட்கட்சி பூசல் காரணமாக தோல்வியுற்றது என்கிறார் கட்டுரையாளர் சிகா முகர்ஜி.
* தாழ்த்தப்பட்டோர் பிரிவினரில் உள் ஒதுக்கீடு குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட அமைச்சர் உத்தம் குமார் தலைமையில் ஒரு நபர் குழுவினை தெலங்கானா அரசு அமைத்தது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானாவில் தசராவிற்குப் பிறகு ஜாதி கணக்கீடு எடுக்கப்படும், அரசு முடிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாடு – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. உமர் அப்துல்லா முதலமைச்சராகிறார்.
தி டெலிகிராப்:
* பெங்களூரு அய்அய்எம்-இல் ஆசிரிய உறுப்பினர் தீபக் மல்கான், கல்வி நிறுவனத்தில் ஜாதி அடிப் படையில் துன்புறுத்தல் நடைபெறுகிறது; பன்முகத் தன்மை இல்லை என எக்ஸ் தளத்தில் பதிவிட்டதற்காக, பதவியில் இருந்து தரமிறக்கிய தற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மேலாண்மை நிறுவனங்களின் (அய்அய்எம்) மேனாள் மாண வர்களும் கல்வியாளர்களும் கையெழுத்து இயக் கத்தைத் தொடங்கியுள்ளனர்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *