சேலத்தில் நடைபெற்ற ஜாதி, தாலி மறுப்பு திருமணம்

2 Min Read

சேலம், அக். 9- சேலம் – பெரியார் பற்றாளர்களும், திராவிடர் கழகம், தமிழர் தலைவர் அவர்களின் மீது மாறா பற்று கொண்டவர்களுமான சேலம், அழகாபுரம் ரா.முரளி (ஆதி திராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் திமுக) – அப்பாவு புவனேஸ்வரி (மகளிர் தொண்டரணி துணைத் தலைவர் திமுக) இணையரின் மகன் மு.பு.அபினேஷ், கோவை கழகத் தோழர்கள் வே.த.தர்மன் – கி.கவிதா இணையரின் மகள் த.க.யாழினிஆகியோரின் இணையேற்பு விழா, ஜாதி, தாலி, சடங்கு மறுத்து கொள்கை விழாவாக நடைபெற்றது.

29.9.2024 அன்று காலை 10 மணிக்கு, சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் நிமிர்வு கலையகம் பறை இசையுடன் தொடங்கியது. பதிப்பக ஆசிரியர் கவுரா ராஜசேகரன் தலைமை வகித்தார். அழகாபுரம் ர.முரளி வரவேற்புரை யாற்றினார். திராவிடர் இயக்க தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் இரா.பா .சுந்தரவதனம் நிகழ்ச்சியை தொகுத்தார்.
திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி இணை ஏற்பு விழாவை நடத்தி வைத்தார்.
திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப வீரபாண்டியனும், திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதினியும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச் செயலாளர் சிற்பி செல்வராஜ், தலைமை கழக அமைப்பாளர் கா.நா.பாலு, கழக காப்பாளர் கி. ஜவகர், மாவட்டத் தலைவர் அ.ச இளவழகன், மாவட்டச் செயலாளர் சி.பூபதி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, செயலாளர் சுரேஷ், மாநகர தலைவர் அரங்க இளவரசன், செயலாளர் இராவண பூபதி, சூரமங்கலம் பகுதி தலைவர் பழ பரமசிவம், செயலாளர் போலீஸ் ராஜி, அம்மாபேட்டை பகுதி தலைவர் குமாரதாசன், கஞ்சநாயக்கன்பட்டி சிறீதர், உள்ளிட்ட கழகத் தோழர்களும், நாமக்கல் மேயர் கலாநிதி, திமுக பொதுக்குழு உறுப்பினர் வீரபாண்டி மலர்விழி ராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் ரேகா பிரியதர்ஷினி, சூர்யா தருண், வெண்ணிலா சேகர் உள்ளிட்ட திமுக கழக தோழர்களும் கலந்து கொண் டனர். அப்பாவு புவனேஸ்வரி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *