வடக்குத்து, அக்.8- வடக்குத்து பெரியார் படிப்பகத்தில்146ஆவது பெரியார் பிறந்த நாள் விழா 94ஆவது மாதாந்திர நிகழ்ச்சி சிறப்பு கருத்தரங்கம் 29.9.24 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் ந.கனகராசு தலைமையேற்றார். கிளை கழக தலைவர் தங்க.பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், மாவட்ட இணை செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, வடலூர் நகரத் தலைவர் சு.இராவணன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இரா.பெரியார் செல்வம் ஆகியோர் முன்னிலையேற்றனர்.
‘பெரியார் பார்வையில் ஜாதி’ எனும் தலைப்பில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி அருணாச்சலம், பெரியார் பார்வையில் மதம் எனும் தலைப்பில் மாவட்ட செயலாளர் க.எழிலேந்தி ‘பெரியார் பார்வையில் கடவுள்’ எனும் தலைப்பில் பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோதரன் சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்ட வீர விளையாட்டு கழக தலைவர் இரா. மாணிக்கவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சி.தர்மலிங்கம், வடலூர் நகர அமைப்பாளர் நா.முருகன், அன்பு, திராவிடன், திராவிட மணி, ப.கா.ரேவந்த், ஆண்டனி, நெய்வேலி பாவேந்தர் விரும்பி, மறுவாய் திருநாவுக்கரசு, செல்வராஜ், ரங்கசாமி, நாகப்பன், கந்தசாமி, ம.மதிவதனி, ம.எழில்வதனி, ம.அறிவாளன், சுமலதா, அறிவு பொன்னி, ஆப்ரகாம், இரா.சேகர், த.அன்புமணி, வி.சங்கர், ப.பாஸ்கர், ஆதவன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் நிறைவாக நூலகர் கிளைக் கழக செயலாளர் இரா கண்ணன் நன்றி கூறினார்.