தமிழ் வளர்ச்சித்துறை மேனாள் இயக்குநர் டாக்டர் கூ.வ.எழிலரசு (எண்.1, பாரதி தெரு, என்.ஜி.ஓ.நகர், காஞ்சிபுரம் – 631501) அவர்கள் சிறு வயது முதல் சேகரித்து வைத்திருந்த தமிழ் இலக்கியங்கள், சுயசரிதை நூல்கள், வரலாறு, பொதுவுடைமைத் தத்துவங்கள் அடங்கிய நூல்களை, உலகின் தலைசிறந்த இயக்கமாம் – சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில், தந்தை பெரியாரின் தத்துவ கருத்துக் கருவூலங்கள் அடங்கிய பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு (பொன்விழா ஆண்டில்) 980 நூல்களை வழங்கியதற்கு நன்றியையும், பாராட்டுதல்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நூலகத்தில் நூல்கள் நன்கொடையாக வழங்கியவர்கள் பெயர்ப் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்க நன்றி.
– நூலகர்,
பெரியார் பகுத்தறிவு நூலகம்
மற்றும் ஆய்வு மய்யம்,
பெரியார் திடல்.