நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

1 Min Read

தமிழ் வளர்ச்சித்துறை மேனாள் இயக்குநர் டாக்டர் கூ.வ.எழிலரசு (எண்.1, பாரதி தெரு, என்.ஜி.ஓ.நகர், காஞ்சிபுரம் – 631501) அவர்கள் சிறு வயது முதல் சேகரித்து வைத்திருந்த தமிழ் இலக்கியங்கள், சுயசரிதை நூல்கள், வரலாறு, பொதுவுடைமைத் தத்துவங்கள் அடங்கிய நூல்களை, உலகின் தலைசிறந்த இயக்கமாம் – சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில், தந்தை பெரியாரின் தத்துவ கருத்துக் கருவூலங்கள் அடங்கிய பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு (பொன்விழா ஆண்டில்) 980 நூல்களை வழங்கியதற்கு நன்றியையும், பாராட்டுதல்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நூலகத்தில் நூல்கள் நன்கொடையாக வழங்கியவர்கள் பெயர்ப் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்க நன்றி.

– நூலகர்,
பெரியார் பகுத்தறிவு நூலகம்
மற்றும் ஆய்வு மய்யம்,
பெரியார் திடல்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *