கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

8.10.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
சாம்சங் நிறுவன தொழிலாளர்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அக்டோபர் மாதம் முதல் 2025 மார்ச் வரை ரூ.5,000 ஊக்க தொகை வழங்கவும் பணியின் போது உயிர் இழந்தால் சம்பந்தப்பட்ட ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும் உடன்பாடு ஏற்பட்டது.
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
நீட் தேர்வு: வினாத்தாள் திருட்டு தொடர்பாக பாட்னாவில் கைது செய்யப்பட்ட 21 பேர் மீது சி.பி.அய். மூன்றாவது குற்றப் பத்திரிக்கையையும் பதிவு செய்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
ஜாதி எண்ணிக்கையை உள்ளடக்கிய மக்கள் தொகை கணக்கெடுப்பை பிரதமர் மோடி ஏன் தாமதப்படுத்துகிறார்: காங்கிரஸ் கேள்வி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை மறுஆய்வு செய்ய கருநாடக அரசு குழு அமைக்க வாய்ப்பு.
தி டெலிகிராப்:
மோடி அரசால் ஓபிசி பிரிவினரில் உள் ஒதுக்கீடு குறித்து 2017இல் அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கை இன்னமும் வெளியிடப்படாமல் உள்ளது ஏன்?

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *