விழும் பற்களை திரும்ப வளர வைக்க ஆய்வு

1 Min Read

அறிவியல்

குழந்தைகளாக இருக்கும் போது பால்பற்கள் விழுந்து, நிரந்தரப் பற்கள் வளரும். நிரந்தரப் பற்கள் விழுந்து விட்டாலோ, அவை திரும்ப முளைப்பதில்லை. ஆனால், சுறாக்களுக்குச் சில வாரங்களுக்கு ஒருமுறை, புதிய பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். முதலை களுக்கும் அவற்றின் வாழ்நாள் முழுதும் ஆயிரக்கணக்கான பற்கள் முளைத்துக் கொண்டே இருக்கும்.

இவற்றை அடிப்படையாக கொண்டு, விழுந்த பற்களைத் திரும்ப வளர வைக்கும் வழி முறையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.

‘போன் மார்ஃபோஜெனிக் புரோட்டீன்’ எனும் ஒரு வகை புரதத்தைத் தூண்டுவதன் வாயி லாக, பல் வளர்ச்சியை உருவாக் கலாம் என்று கண்டறிந்துள்ளனர்.

எலிகளில் நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்ததை அடுத்து, 2024ஆம் ஆண்டில் ‘டூத் ஏஜனிசிஸ்’ எனும் மரபணு குறைபாட்டினால் ஏற்படும் பல் வளர்ச்சி யின்மையால் அவதிப் படுவோ ரிடம் சோதனை நடத்த உள்ளனர்.

தற்போது இது குறித்து ஆராய்ந்து வரும் ஜப்பான் நாட்டின் ஒசாகா மருத்துவ ஆய்வு மய்யத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இந்தப் புதிய சிகிச்சை முறை 2030ஆம் ஆண்டிற்குள் முழு வடிவம் பெறும் என்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *