பார்ப்பனர் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டுமாம்! கோட்டைக்குப் பேரணியாம்!!

Viduthalai
1 Min Read

கோவை,அக்.6- பார்ப்பனர் சமூகத்தை பாதுகாக்க, ஒன்றிய – மாநில அரசுகள் புதிய சட்டம் இயற்றக்கோரி, சென்னையில், வள்ளுவர் கோட்டம் முதல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை, நவ., 3இல் பேரணி நடத்தப்பட உள்ளதாம்.
இது தொடர்பாக, ஹிந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலர் டி.குருமூர்த்தி என்பவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் மற்ற சமுதாயத் தினருக்கு அளிப்பதுபோல, பார்ப்பனர் சமுதாயத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எந்த சலுகையும் வழங்குவதில்லை; இட ஒதுக்கீடும் கிடையாது. வேலைவாய்ப்பிலும் முன்னுரிமையோ, சலுகையோ வழங்குவதில்லை.

பாடசாலை மற்றும் கோவில் களில் பணிபுரியும் குருக்களை கிண்டல் செய்து வந்தவர்கள், தற்போது ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலாவை விமர்சிக்கும் அள வுக்கு வந்து விட்டனர்.
திராவிட கொள்கையை புகுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, பார்ப்பனர் சமுதாயத்தை இழிவுபடுத்தி வருகின்றனர்.
பிற சமூகத்தினரை இழிவு படுத்தி பேசினால், உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் உள்ளது. பார்ப்பனர்களை இழிவுபடுத்தி பேசுபவர்களை தண்டிப்பதற்கு, இதுவரை சட்டமில்லை.

அச்சமூகத்தை பாதுகாக்கும் வகையிலும், அவர்களை இழிவு படுத்தி பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையிலும், ஒன்றிய – மாநில அரசுகள் புதிய சட்டம் இயற்ற வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து சமுதாய தலைவர்களின் ஆதரவோடு, சென்னையில் வள்ளுவர் கோட்டம் முதல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை, ஒரு லட்சம் பார்ப்பனர்களை ஒன்று திரட்டி, நவ., 3இல் கோரிக்கை பேரணி நடத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.
இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் அறிக்கை நாளை வெளிவரும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *