புவியில் புதுமைக் கண்டுபிடிப்புகள்

1 Min Read

அரசியல்

1. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மரபுசாரா எரிபொருள் உற்பத்தி நிறுவனமான ‘இகோட்ரிசிட்டி,’ சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத ‘ஈகோஜெட்’ விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ளது. ஹைட்ரஜன் வாயு விலிருந்து மின்சாரம் தயாரித்து இதை இயக்க உள்ளனர். 2025ஆம் ஆண்டு இது பயன்பாட்டுக்கு வரும். விமானத்தின் உள்ளேயும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத உணவு, தொழிலாளர் உடைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.

2. அமெரிக்காவின் வாசிங்டன் மருத்துவப் பல்கலையைச் சேர்ந்த மருத்துவர்கள் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட, 60 வயது நோயாளிக்கு மிகவும் சிக்கலான, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை, ரோபோவை வைத்து வெற்றிகரமாக செய்துள்ளனர். ரோபோவின் அருகில் இருந்தபடி, அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் அதனை இயக்கி வெற்றி கண்டுள்ளனர்.

3. புவி வெப்பத்தை அதிகரிக்க வைக்கும் பசுமை இல்ல வாயுக்களில் முக்கியமானது மீத்தேன். இது பசுக்களின் சாணத்தில் இருந்து அதிகளவில் வெளிவருகிறது. சுவீடன் நாட்டு விவசாய பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பசுஞ்சாணத்தில் ‘ஆஸ் பராகாப்சிஸ் டாக்ஸ்ஃபோர்மிஸ்’ எனும் சிவப்பு நிறப்பாசியைச் சேர்ப்பதன் வாயிலாக, அதிலிருந்து உற்பத்தி ஆகும் மீத்தேனை, 44 சதவீத அளவுக்குக் குறைக்க முடியும் என்று கண்டு பிடித்துள்ளனர்.

4. ஆஸ்திரேலியாவின் குவின்ஸ் லாந்து பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘மெகாலோபிகி ஓபெர் குலாரிஸ்’ எனும் ஒருவகை புழுவின் முடியிலிருந்து எடுக்கப்படும் சில மூலக்கூறுகளுக்குப் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் இதிலிருந்து புற்று நோய்க்கான மருந்து தயாரிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித் துள்ளனர்.

5. ரஷ்யாவின் லூனா 25 விண்கலம், ஆகஸ்ட் 11ஆம் தேதி சந்திரனுக்குச் செலுத்தப்பட இருக் கிறது. இது சந்திரனின் தென் துருவத்தை அடைந்து அங்குள்ள மண்ணை ஆராய்ந்து, அதில் பனிக் கட்டிகள் உள்ளனவா என்று கண்டறிய உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *