தேனியில் புத்தக வெளியீடு

1 Min Read

தேனி மாவட்டம் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெரியார் சிலைக்கு மாவட்ட காப்பாளர் ரகு நாகநாதன் மாலை அணுவித்தார்கள். காங்கிரஸ் சி.பி.அய்., சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் மாலை அணிவித்து சிறப்பித்தார்கள் அதுசமயம் பாலு மணிவண்ணன் எழுதிய “ஏன் வேண்டும் பகுத்தறிவு?” என்ற நூலை சிபிஎம் தாலுகா செயலாளர் பாண்டியன் வெளியிட பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தாதேவி, ஆசிரியை வசந்தா பெற்றுக் கொண்டனர்.

நூலைப்பற்றி பெரியகுளம் கவிஞர் நாகநந்தினி உரையாற்றினார். நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் முசாக்மந்திரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் மதன், சிபிஅய் நகரச் செயலாளர் சத்யராஜ், சிபிஅய் மேனாள் மாவட்ட செயலாளர் ராஜப்பன் மற்றும் பலர் உரையாற்றினர். விழாவில் மாவட்ட தலைவர் சுருளி ராஜ், நகரத் தலைவர் பொறியாளர் பெரியார் லெனின், நகரச் செயலாளர் பொறியாளர் முருகானந்தம், மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், மாணவர் கழக செயலாளர் பெரியார் மணி, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் வஜ்ரவேலு நெடுஞ்செழியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *