மறைக்கப்பட்ட வரலாற்றுத் தரவுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த கீழடி!

1 Min Read

மதுரை, அக்.6 சிந்து சமவெளி திராவிட நாகரிகத்திற்கு இணையாக 2600 ஆண்டுகள் பழைமையான நாகரிகம் இங்கு இருந்து வந்திருக்கிறது.
இங்கு இன்று நடை முறையில் புழங்கும் வழிபாடு சார்ந்த மொழி முதற்கொண்டு உருவங்கள் வரை எவையும் அங்கு கிடைக்கவில்லை.
அதேசமயம் அங்கு கிடைத்த ஓடுகளில் எழுதப்பட்டவை ஆதிச்சநல்லூர், அழகன் குளம், கொற்கை, கொடுமணல் போன்ற இடங்களில் கிடைத்த ஓடுகளில் பெறப்பட்ட கிமு 3 நூற்றாண்டு தமிழ் பிராமி (வட்டெழுத்து) எழுத்துகளுடன் ஒத்துப்போவதோடு, இவை அதற்கு முந்திய கி.மு. 6ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக மதிப்பிடப்படுகிறது. நிற்க.

இவ்வாறு தமிழ், பழந்தமிழர் சார்ந்த அனைத்தும் ஆய்வுகள் மற்றும் தரவுகள் கொண்டு தொடர்ந்து நிறுவப்பட்டு வருகிறது. ஆனால் அதேசயமம் இங்கு வழிபாடுகளில் முக்கிய பங்கை தனதாக்கிக் கொண்ட சமஸ்கிருத மொழி சார்ந்து இங்கு சொல்லப்படுபவைகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் போகிற போக்கில் அடித்து விடும் கட்டுக்கதைகளே எங்கும் நிறைந்திருக்கின்றன.

இணையத்தில் (முகநூல், வாட்சப்) சமஸ்கிருதம் சார்ந்து எந்த வித ஆதாரமும் இன்றி விதவிதமாக கம்பு சுற்றுபவர்கள், தொலைக்ககாட்சி விவாதங்களில் தமிழார்வலர்களோடு நேரடி யான விவாதத்தில் கலந்து கொள்ளும் போது அவர்களின் சாயம் வெளுத்து விடுகிறது. அதுபோன்ற ஒரு நிகழ்வில் தமிழும்,சமஸ்கிருதமும் மோதிக் கொண்ட சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்வில் கீழடி தொடர்பான உண்மைகள் வெளிப்பட்டுள்ள சூழ்நிலையில் இதையும் அறிந்து கொள்வது மேலும் நன்மை பயக்கும் என்பதால் இந்த பதிவு.
தமிழின் தொன்மை 6000 ஆண்டுகள், சமஸ்கிருத மொழியின் தொன்மை 2500 ஆண்டுகள் மட்டுமே என தரவு களுடன் தெளிவாக நிறுவுகிறார்.தமிழ் பேராசிரியர் வீ. அரசு.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *