இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

Viduthalai
1 Min Read

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன மேனாள் துணைத் தலைவர், கழகக் காப்பாளர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் அன்று இராஜகிரியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது படத்திற்கு கும்பகோணம் மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் சு.விஜய குமார் (வழக்குரைஞர்), மாவட்ட செயலாளர் துரைராஜ், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன் முன்னி லையில் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் மாலை அணிவித்தனர். தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் சீனி.சுகுமாறன், இராஜகிரி கலியமூர்த்தி, சுகுமார், ஜனார்த்தனன், திருநாகேஸ்வரம் ந.சிவக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் நெடுந்தெரு சரவணன், திருநாகேஸ்வரம் குருமூர்த்தி, திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசன் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *