இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

1 Min Read

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன மேனாள் துணைத் தலைவர், கழகக் காப்பாளர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் அன்று இராஜகிரியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது படத்திற்கு கும்பகோணம் மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் சு.விஜய குமார் (வழக்குரைஞர்), மாவட்ட செயலாளர் துரைராஜ், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன் முன்னி லையில் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் மாலை அணிவித்தனர். தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் சீனி.சுகுமாறன், இராஜகிரி கலியமூர்த்தி, சுகுமார், ஜனார்த்தனன், திருநாகேஸ்வரம் ந.சிவக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் நெடுந்தெரு சரவணன், திருநாகேஸ்வரம் குருமூர்த்தி, திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசன் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *