வல்லம், அக். 5- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத் தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) இயற்பி யல் துறை சார்பாக 27.09.2024 அன்று, சூரிய சக்தி உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நானோ தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் செயல் திறன் வளர்ச்சிகள் பற்றி முதல் பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் பி.காயத்ரி வரவேற்புரையாற்றினார். பல் கலைக்கழக பதிவாளர் பேரா. பி.கே.சிறீவித்யா தொடக்கவுரை ஆற்றினார். முனைவர் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் வெளியீட்டு மய்யத்தின் இயக்குநர் முனைவர் பி.பாலகுமார் வாழ்த்துரை வழங்கினார். புத்தாக்கம், அறிவுசார் சொத்துரிமை மற்றும் சமூக ஈடுபாடு இயக்குநர் முனைவர் எஸ்.குமரன் முக்கிய விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூர் அ.வீ.வா.நினைவு சிறீபுஷ்பம் கல்லூரி, இயற்பியல் துறைத்தலைவர், இணைப்பேராசிரியர் கே.ரவிச்சந்திரன், மேற்கு ஆப்பிரிக்கா லோம் டோகோ பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் மசபலோ பெனோடோ மற்றும் தஞ்சாவூர், அ.வீ.வா.நினைவு சிறீபுஷ்பம் கல்லூரி, விலங்கியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியர் பி.கவிதா ஆகியோர் கலந்து கொண்டு சமீபத்திய பரிணாம மாற்றங்களில் நானோ தொழில்நுட்பம் பற்றியும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் பேசினார்கள்.
இக்கருத்தரங்கிற்கு இயற்பியல், வேதியியல், உயிர் தொழில் நுட்பவியல், இயந்திர பொறியியல் மற்றும் நானோ தொழில்நுட்பவியல் துறைகளின் மாணவிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை துறைசார் பேராசிரியர்கள் முனைவர் என்.சிவஜோதி மற்றும்
ஆர்.சாலினி ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச் சியை இயற்பியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி ஜி.சிறீநிதி தொகுத்து வழங்கினார். இறுதியாக இயற்பியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எம்.கோகுலகிருஷ்ணா நன்றியுரை வழங்கினார்.