அய்.நா., பொதுச்செயலாளர் இஸ்ரேலில் நுழைய தடையாம்

1 Min Read

டெல் அவிவ், அக்.5- அய்.நா., பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், தங்கள் நாட்டிற்குள் நுழைய இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது.
மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில்,
அய்.நா., பொதுச்செயலாளர் ஆன்ட னியோ குட்டரெஸ், இஸ்ரேல் நாட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், தங்கள் நாட்டிற்குள் அவர் உள்ளே நுழைய இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ் கூறியதாவது:
அய்.நா., பொதுச்செயலராக உள்ள ஆன்டனியோ குட்டரெஸ், ஆளுமை இல்லாத நபராக உள்ளார். எங்கள் நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை உலக நாடுகள் கண்டித்தன; ஆனால், அய்.நா., அமைப்பு ஒன்றும் கூறவில்லை.
எனவே, மவுனம் காக்கும் யாருக்கும் எங்கள் மண்ணில் காலடி எடுத்து வைக்கும் தகுதி இல்லை.
அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியது உட்பட பல அட்டூழியங்களை மேற்கொண்ட ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி போன்றவற்றை பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கவில்லை.
அவர்களை ஆதரிக்கும் குட்டரெஸ், அய்.நா., வரலாற்றில் ஒரு கறையாக எப்போதும் நினைவு கொள்ளப்படுவார்.
-இவ்வாறு கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *