கங்கை எங்கே போகும்? தன் பாவம் கழுவ….

1 Min Read

என்ன ஆனது ரூ.40,000 கோடி ‘நமாமி கங்கே’ (புனித கங்கை திட்டம்)
கங்கை தரை தளத்தில் வந்தடையும் அரித்துவாரில் இருந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் இடம் வரை புனிதம் என்ற பெயரில் உடல்களை மிதக்கவிடும் அவலம் இன்றும் தொடர்கிறது.

சமீபத்தில் உத்தரப்பிரதேசம் – பீகார் எல்லையான பக்சரில் கங்கையில் உடல் ஒன்று உறவினர்களால் மிதக்க விடப்பட்டது,
இதற்கு காரணம் கூறும்போது, அவர் மிகவும் பாவம் செய்து விட்டதாக ஜோதிடர் கூறினாராம். அக்னியால் அவரது பாவத்தை பொசுக்க முடியாதாம்! ஆகவே, கங்கையில் விட்டால் கங்கை அவரது பாவத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு மோட்சம் கொடுக்குமாம்! ஆகையால் உடலை கங்கையில் மிதக்கவிட்டுள்ளார்களாம்.

இப்போது புரிகிறதா? கங்கை ஏன் தூய்மை ஆகவில்லை என்று. பிறகு எதற்கு ‘நமாமி கங்கே’ என்ற திட்டத்திற்கு ரூ.40,000 கோடியை கட்டி அழுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *