ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பீகார் மாநில அரசுக்கு தடையில்லை!

1 Min Read

பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பாட்னா, ஆக.3- பீகாரில் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்த தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, பாட்னா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பீகாரில், முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2022லிருந்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும் பணி துவங்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் பாட்னா உயர்நீதிமன்றத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது.

‘ஜாதிவாரி கணக்கெடுப்பு என கூறி, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இது போன்ற கணக்கெடுப்பை நடத்த, ஒன்றிய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநில அரசு இந்த கணக்கெடுப்பை நடத்தக் கூடாது’ என மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தது.

இதை எதிர்த்து, மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம், தடையை நீக்க மறுத்து விட்டது.

இந்நிலையில், பாட்னா உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில், தலைமை நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.

அப்போது, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி கள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து மாநில அரசுகள் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தடையில்லை என்ப தால், பீகாரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு பணிகள் மீண்டும் தொடரும் என்று கூறப்படு கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *