வைக்கம் சத்தியாக்கிரஹத்தைப் பற்றி காந்தியடிகள் பின்வருமாறு தமது பத்திரிகையில் எழுதுகிறார்.
திருவாங்கூர் அரசாங்கத்தார் குரூர் நம்பூதிரிபாட் அவர்களை விடுதலை செய்ததைக் குறித்தும், ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் மீதிருந்த தடை உத்தரவு எடுக்கப்பட்டதைக் குறித்தும் வாசகர்கள் சந்தோஷமுறுவார்களென நினைக்கின்றேன். எனக்கும் போலீஸ் கமிஷனருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் திருவாங்கூர் அரசாங்கத் தார் நிறைவேற்றி வருகின்றனர். வெகு நாளாகச் செய்யத் தாமதித்து வந்த சீர்திருத்தத்தை இப்பொழுது நிறைவேற்றுவதைக் குறித்து அவர்களை வாழ்த்துகிறேன். தீண்டாதார் கோவில்களைச் சுற்றி யுள்ள பொது ரஸ்தாக்களில் போகக் கூடாதென்ற தடையும் சீக்கிரத் தில் நீங்கி விடுமென நினைக்கிறேன். சத்தியாக்கிரஹிகளும் ஒப்பந்தத்தை முற்றிலும் நிறைவேற்றி வைக்க வேண்டியதின் அவசியத்தைப் பற்றி நான் அதிகம் கூற வேண்டுவதில்லை.
– ‘குடிஅரசு’. செய்தி 02.05.1925