அயலகத் தமிழர்களுக்கான கட்டணமில்லா தொலைப்பேசி மய்யம்

1 Min Read

சென்னை, நவ. 17- அயலகத் தமிழர்களுக்கான கட்டணமில் லாத 24 மணிநேர தொலைப்பேசி மய்யம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடங்கி வைத்தார்.

சென்னை எழிலகத்தில் இந்த மய்யம் செயல்படும். இந்தியாவுக்குள் இருப்பவர்கள் 1800 309 3793 என்ற எண்ணிலும், இந்தியாவுக்கு வெளியே இருப்பவர்கள் 806 900 9900 மற்றும் 806 900 9901 ஆகிய எண்களிலும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இனி வரும் காலங் களில் தங்களுக்கான பிரச்சினைகளை எதிர்கொள்ள வசதியாகவும், அரசின் ஆலோசனையை எளிதாகவும், விரைவாகவும் பெற ஏதுவாக இந்த கட்டணமில்லாத தொலைப்பேசி எண்கள் உதவும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *