தானிருந்த கட்சிக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றம் என்னவென்பதையும், இவற்றிற்காகத் தான் இருந்த கட்சியில் இருக்கும் போது செய்த முயற்சிகள் என்ன – தெரிவித்த யோசனைகள் என்ன என்பனவற்றையும் விளக்கிக் காட்டிவிட்டு – தான் புதிதாகச் சேரப் போகின்ற கட்சியின் யோக்கியதை என்ன; நாணயம் என்ன, அதனால் மக்களுக்கு – நாட்டுக்கு விளையப் போகும் நன்மை என்ன என்பதையும் விளக்கிக் கட்சிக்கும், தனக்கும் ஓட்டளித்த ஓட்டர்களுக்கும் தெரிவித்துவிட்டு விலகாமல் – சுயநலம், சொந்த – விருப்பு, வெறுப்பின்படி ஆதாயம் கருதி கட்சி மாறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’