அடையாறு கோ. அரங்கநாதன் 13ஆம் ஆண்டு நினைவேந்தல்

1 Min Read

சென்னை, அக். 4- பெரியார் பெருந்தொண்டர் அடையாறு கோ.அரங்கநாதன் அவர்களின் 13 ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை இந்திரா நகரில் உள்ள அவரின் இல்லத்தின் எதிரில் 01.10.2024 நண்பகல் 12 மணி அளவில் சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் ஆர். டி. .வீரபத்திரன் தலைமையில் நடைபெற்றது.

தென் சென்னை மாவட்ட தலை வர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு, துணைத் தலைவர் தமிழினியன், தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், சோழிங்கநல்லூர் மாவட்ட துணைச் செயலாளர் ஆனந்தராஜ் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.

கோ.அரங்கநாதன் அவர்களின் மகன்கள் அர.சித்தார்த்தன், அர.இராமசாமி, அர. அண்ணாதுரை, மகள் இந்திரா மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையிலே ஏற்பாடு செய்திருந்தனர். கழகத் தோழர்களும் அப்பகுதி நண்பர்களும் கலந்து கொண்டனர். கோ.அரங்கநாதன் அவர்களின் மகள் இந்திரா நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *