சென்னை, அக். 4- மின்னல்-மழைப்பொழிவு அதே வேளையில் மழை வெள்ளத்தை முன்கூட்டியே பொது மக்களும் எளிதாக தெரிந்து கொண்டு முன்னேற்பாடுகளை செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு ‘‘தமிழ்நாடு அலர்ட்’’ (TN-ALERT) என்ற செயலி-யை வடிவமைத்து உள்ளது.
இதனை ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இருந்து பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலியில் நாம் இருக்கும் இடத்தில் வானிலை, மின்னல், மழைப்பொழிவு ஆகிய விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள தேவைப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் எந்தப் பகுதியில் மழை வெள்ளம் இருக்கும் என்பதனையும் பார்த்து கொள்ளலாம்.
மேலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துவிட்டாலே உங்களுக்கு இதுதொடர்பான அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கும். அதேபோல் நீர்தேக்கங்களின் நீர்மட்டம், அபாய எச்சரிக்கை ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.
மழை வெள்ளத்தை முன்கூட்டியே அறிய தமிழ்நாடு அலர்ட் செயலி உருவாக்கம்
Leave a Comment