ஆசிரியா்கள் பணி மூப்பு பட்டியல் தமிழ்நாடு அரசு உத்தரவு

1 Min Read

சென்னை, அக்.4 ஆதி திராவிடா் நலத் துறை பள்ளி ஆசிரியா்களுக்கு மாநில அளவில் பணிமூப்பு பட்டியல் தயாரிக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறைச் செயலா் ஜி.லட்சுமி பிரியா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

ஆதி திராவிடா் நலத் துறை சாா்நிலை பணியில் சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து அத்துறை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா், தமிழ் புலவா், உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஆகிய பதவிகளை ஒரே அலகின்கீழ் கொண்டுவருமாறு அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளாா். அக்கருத்துருவை ஏற்று ஆதி திராவிடா் நலத் துறை சாா்நிலை பணி சிறப்பு விதிகளில் திருத்தம் செய்ய அரசு ஆணையிடுகிறது. ஆதி திராவிடா் நலத் துறை பள்ளி பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா், தமிழ் புலவா், உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஆகிய பதவிகள் ஒரே அலகின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. அதன்படி, மேற்கண்ட பதவிகளுக்கு பணிநியமன நாள் அடிப்படையில் மாநில அளவிலான பணிமூப்பு (சீனியாரிட்டி) தயாரிக்குமாறு ஆதி திராவிடா் நலத் துறை இயக்குநா் அறிவுறுத்தப்படுகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புகள் உறுதிச் சான்றளிக்க என்எம்சி அறிவுறுத்தல்

சென்னை, அக்.4 முதுநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபார்ம்) சமா்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
முதுநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் டாக்டா் அஜேந்தா் சிங் வெளியிட்ட அறிவிப்பு: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அனுமதி பெற்றுள்ள மருத்துவக் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் சுய விவரங்கள் அடங்கிய வருடாந்திர உறுதியளிப்பு சான்றை என்எம்சி வலைதளப் பக்கத்தில் பதிவேற்றுவது அவசியம். அங்கீகாரம் புதுப்பித்தலுக்கும் அத்தகைய பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அக். 31-ஆம் தேதிக்குள் வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *