4.10.2024 வெள்ளிக்கிழமை அய்யுறு வெளியீடாக பேரா. மணிகோ பன்னீர்செல்வத்தின் நீலச்சட்டைக் கலைஞர்-நூல் வெளியீட்டு விழா

2 Min Read

சென்னை: மாலை 5 மணி *இடம்: தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம், கோட்டூர்புரம் (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்) *நூலை வெளியிட்டுச் சிறப்புரை: ஆ.இராசா (நாடாளுமன்ற உறுப்பினர்) *நூலைப் பெற்று உரையாற்றுவோர்: இந்திரகுமார் தேரடி (அரசியல் பிரிவு ஆசிரியர், பேரலை வலைக்காட்சி), சூர்யா கிருஷ்ணமூர்த்தி (செய்தித் தொடர்பாளர், திமுக), தமிழ் காமராசன் (திராவிட இயக்க ஆய்வாளர்), மகிழ்நன் (இணையாசிரியர், அரண்செய் வலைக்காட்சி) *ஏற்புரை: பேராசிரியர் மணிகோ பன்னீர்செல்வம் (பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) *நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: இரா.மோகனவசந்தன்.

5.10.2024 சனிக்கிழமை
அரியலூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல்
அரியலூர்: காலை 10 மணி *இடம் : சிவக்கொழுந்து இல்லம் அரியலூர் * வரவேற்புரை: எஸ்.எஸ்.திராவிடச் செல்வன் (மாநில மா.அ.து. அமைப்பாளர்) * தலைமை: இரா.செந்தூரப் பாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்) * தொடக்க உரை: மு.இளமாறன் (சட்டக்கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர்) * முன்னிலை: தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்) *சிறப்புரை: கசிந்தனைச் செல்வன்
(தலைமைக் கழக அமைப்பாளர்). விடுதலை நீலமேகம் (மாவட்ட தலைவர்) * பொருள் : அமைப்பு பணிகள், “உண்மை” சந்தா சேர்ப்பு, கருத்தரங்கம் நடத்துவது குறித்து…

பெரம்பலூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல்
பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் * தலைமை: இரா.செந்தூரப்பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * வரவேற்புரை: பொ.பிறைசூடன் (மாவட்டத் தலைவர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * கருத்துரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்), ந.ஆறுமுகம் (நகரத் தலைவர்), பெ.நடராசன் (மாவட்டத் தலைவர், ப.க.), ப.வெங்கடேசன் * பொருள்: தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா கருத்தரங்கத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நடத்துவது, உண்மை இதழுக்கு சந்தாக்கள் திரட்டுவது, மாணவர் அமைப்புப் பணிகள் தொடர்பாக * நன்றியுரை: க.குமரேசன் (மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர்)

6.10.2024 ஞாயிற்றுக்கிழமை
தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
தூத்துக்குடி: காலை 10 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை:
தி.இல.கார்த்திகேயன் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: செ.நவீன்குமார் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்) *பொருள்: இளைஞரணியைக் கட்டமைத்தல் *சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்), அ.சவுந்திரபாண்டியன் (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர்) *நன்றியுரை: ஆ.கலைமணி (மாவட்டத் துணைத் தலைவர், திராவிட மாணவர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *